Monday, June 8, 2009

கேள்வி : முன்பிருந்த இலங்கை அழிவுற்றதென உரையாசிரியர் கூற்றை எடுத்துரைக்கும் தாங்கள் அதற்குரிய மூலச்சான்றை கூற்முடியுமா? ப்தில் : முடியும். சிவதருமோத்தரம் என்னும் சைவவுபாகமத்தில் பொதிகைககுத் தென்பால் மாமேரு (மகேந்திர) மலை தெற்கு முதல் வடக்கு ஈறாக இருந்ததென்றும் அதன் அடிவாரத்தின்கண் இருந்த தேஎம் பொன்மயமான இலங்கை என்னும் பகுதியினை சுட்டிக்காட்டும் மூலபாடம் "துங்கமலி பொதித்தென்பாற் றுடர்ந்த வடிவாரத்தின் அங்கனக விலங்கையுமேழ் வரைச்சார லடித்தேசம்" என்பதாகும். கேள்வி : தமிழ் ஈழத்தின் எதிர்காலம் என்ன? பதில் : பொற்காலம். தருமந்தன்னை சூது கவ்வும் முதலில்; முடிவில் தருமம் வெல்லும் என்னும் கீதையின் பொன்மொழியினை படிப்போர் இதன் உண்மை சாரத்தை மறுக்க முடியாது

No comments: