Friday, August 15, 2025

உண்மையான சுதந்திர தினம் என்று!?

 சுயசாதியே சுயசாதியை

சுரண்டி கொழுக்கும்.
.............

..................
(1) 1950-அன்று சாதி ரீதியாக இட ஒதுக்கீடு செய்தது சரியானது தான்.
.
(2) ஆனால் 2023-ல் இது சரியா என்றால்; இல்லை என்று தான் எனது பதில் ஆகும்.
.
(3) ஒரு வீட்டில் அரசு வேலை பார்க்கும் அண்ணன் மகனும்...
.
சுய தொழில் பார்க்கும் தம்பி மகனுமே சமம் இல்லை.
அப்படி இருக்கும் போது ஒரே சமூகம் அல்லது 50சமூகம் அல்லது 100சமூகம் எப்படி ஒரே பிரிவில் சமமான நிலையில் இருக்கும்?
.
(4) எனது மகனும் திண்டுகல் சீனிவாசன் மகனும் ஒன்றா?
.
எடப்பாடி மகனும் ஒரு ஏழை கவுண்டர் மகனும் ஒன்றா?
ராமதாஸ் மகனும் ஒரு ஏழை வன்னியர் மகனும் ஒன்றா?
(5) தற்போது உள்ள இட ஒதுக்கீடு படி டாக்டர் மகன் டாக்டர் ஆவான். கலெக்டர் மகன் கலெக்டர் ஆவான். போலீஸ் மகன் போலீஸ் ஆவான். வாத்தியார் மகன் வாத்தியார் ஆவான்.
.
(6) தற்போது உள்ள முறை படி இட ஒதுக்கீட்டை அனுபவித்தவன் மட்டுமே மீண்டும் அனுபவிப்பான்.
.
(7) எனவே பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடே சரி ஆகும்.
.
(😎 A. 10லட்சம் கீழ் உள்ளவர்கள்.
B. 10லட்சம் முதல் 50லட்சம் உள்ளவர்கள்.
C. 50லட்சம் முதல் 1கோடி உள்ளவர்கள்.
D. 1கோடி முதல் 2கோடி உள்ளவர்கள்.
E. 2கோடி முதல் 5கோடி உள்ளவர்கள்.
F. 5கோடி முதல் 10கோடி உள்ளவர்கள்.
G. 10கோடி முதல் 20கோடி உள்ளவர்கள்.
H. 20 கோடி முதல் 50கோடி உள்ளவர்கள்.
I. 50கோடி முதல் 100கோடி உள்ளவர்கள்.
J. 100கோடிக்கு மேல் உள்ளவர்கள்.
இது போன்ற 10பிரிவில் இட ஒதுக்கீடு கொடுத்தால் அனைவருக்கும் சமமாக கிடைக்கும்.
(9) மேலே உள்ளவர்களின் மக்கள் தொகை எண்ணிக்கை ஏற்ப பொருளாதார இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.
(10) வங்கி, பத்திர ஆபிஸ், விஏஓ ஆபிஸ், நகராட்சி இவை நான்கு துறை மூலம் ஒருவர் சொத்தை எளிதாக கணக்கிடலாம்.
(11) இது போன்று பொருளாதார பிரிவு படி என்று இட ஒதுக்கீடு செய்கிறார்களோ...
அன்று தான் உண்மையான சுதந்திர தினம்.
.
அன்று வரை
சுயசாதியே சுயசாதியை
சுரண்டி கொழுக்கும்.
=======================
A Senthilkumar
புள்ளிவிவரங்களையும் விளம்பரங்களையும் காண்க
எல்லா உணர்ச்சிகளும்:
A Senthilkumar

நாங்கள் போர்குடி சமூகம்

 நாங்கள் போர்குடி சமூகம் யாரைகாக்க போர் செய்தோமோ அவர்களாலேயே வீழ்த்தப்படுகிறாம்!

.
இஸ்லாமிரை எதிர்த்தோம்
பலர் இஸ்லாமியராகவே ஆக போனார்கள்
.
எங்கள் பெண்கள் விதைவைகள் ஆனாலும் நாங்கள் மாறவில்லை!
.
ஆங்கிலேயரை எதிர்த்தோம் பலர்ஆங்கிலேயர் ஆகிபோனார்கள் இருதியில் குற்றபரம்பரை ஆனோம் அதையே எங்கள் அடையாளமாக்கி மகிழ்கிறீர்கள் பராவாஇல்லை!
..
ஆயிரம் சட்டம் போட்டு எங்கனை அடிமை படுத்த மியன்றாலும் எங்கள் பன்பாட்டையும் எங்கள் குலவழக்கத்தையும் மாற்ற மாட்டோம் நாங்கள் இன்னும் M130 மரபனு கொண்ட மறக்குடி!
.
Ram Ambalam Thevar

சாதி ஒழிப்பு

 முதலில் சாதி பேதத்தை

ஒழிக்கச் சொன்னார்கள்.
.
பின்னர் அதை
"சாதி ஒழிப்பு" என்று மாற்றினார்கள்.
.
இப்போது
ஆதிக்கத்தைக் காட்டும்
சாதியை ஒழிப்பதாகச் சொல்கிறார்கள்.
அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்.
.
Perumal Thevan
{{{பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் தான்
ஆண் . பெண் அனைவரும்
கூமுட்டைகளாக இருக்கின்றன}}}

நாங்குநேரி

 

பிரச்சினையை அரசியலாக்கத்தான்
இங்கு பிணம் தின்னும் கழுகுகள்
அலைகின்றனவே ஒழிய
.
பிரச்சினைக்கு உளவியல் ரீதியாக
என்ன காரணம் என்று யாரும் அறியத் துணிவதில்லை..
.
சாதீய பிரச்சினைகளுக்கு
பல்வேறு காரணங்கள் ஒன்றோடு ஒன்று
பிண்ணிப் பிணைந்துள்ளது... அவையாவன...
.
1. சாதீய ரீதியில் செயல்படும் ஆசிரியர்கள்
2. சாதீய வெறியில் உள்ள காவலர்கள்
3. சர்வசாதாரணமாக புழக்கத்தில் உள்ள கஞ்சா
4. இலகுவாக மதுவை வழங்கும் டாஸ்மாக்
5. திராவிட அரசியல்வாதிகள்
6. ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றோரின் சினிமாக்கள்
7. நடுநிலை தவறிய ஊடகங்கள்
8. போலி வன்கொடுமை புகார்கள்
9. சமூக வலைதளங்கள்
10. அரசின் ஒரு சார்பு தன்மை...
.
இவை ஒன்றோடொன்று இப்பிரச்சினைகளுக்கு
தூபம் போட்டுக் கொண்டே இருக்கிறது.
.
முன்னாள் நீதியரசர் சந்துரு
தனது விசாரணை கமிஷனில்,
நேர்மையாக இவை அனைத்தையும்
கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
.
நேதாஜி இளைஞர் சங்கம்

அமிர் கூட்டம்

 முக்குலத்தோர் மற்றும் பட்டியல் வகுப்பினரிடையே தொடர்ந்து தொன்று தொட்டு அரசியல் சித்து விளையாட்டுகளை செய்து அதனால் அரசியல் வெற்றிகளை மாநிலத்தில் திராவிட சிறுபான்மை மொழியினர் கூட்டிலும் மத்தியில் இதேபோல பட்டியல் சிறுபான்மை மத மொழி கூட்டிலும் பயணித்து கொண்டு இந்திய அரசியல் அமைப்பின் சலுகைகைளை பெற்றும் குதூகலித்து கொண்டு

அமிர் கூட்டம்
மாநிலத்தில் பெரும்பான்மை தமிழர் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஆப்படித்தும் மத்தியில் ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் ஆப்படிக்கும் நுணுக்கம் மிக தந்திரமானது உங்களை எதிர்த்து போரிட்ட பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட போர்க்குடி மக்களை நீங்கள் அரசியலில் எப்படி சாய்க்கிறீர்கள் அவர்களுக்கு எதிராக பட்டியல் இனமக்களை தூண்டுவது தெளிவாக புரிகிறது
நீங்கள் பெரும்பான்மை மதத்தவர் ஆள்வதையும் பெரும்பான்மை இனத்தவர் தமிழ்ச்சமூகத்தில் வளர்வதையயும் ஏற்பதில்லை என்பது உங்கள் அரசியல் என்பது தெளிவாகிறது
.
இராஜராஜன் மு

நம்ம வீட்டு பொண்ணுங்க மேல எதுக்கு இவ்ளோ அக்கறை இவனுங்களுக்கு


நேற்று பல பக்கங்களில்
பெண்ணியம் குறித்து
காரசாரமான விவாதங்களை பார்த்தேன்
.
எங்க வீட்டுல எல்லா முடிவும் அம்மாதான்
ஆனா மத்தவங்களுக்கு முன்ன
அய்யய்யோ அவருக்கு தெரிஞ்சா சத்தம் போடுவாரு
அவருகிட்டையும் ஒருவார்த்தை சொல்லிருங்க
ஒரு பத்து நிமிஷம் பொறுங்க இந்தா வந்துருவாரு
பார்த்துட்டே போயிருங்க
.
இதான் அம்மா
.
இடுப்பு வலின்னு சொன்னாரு முடக்கத்தான் பறிச்சிட்டு வாடா தம்பி
இதான் அம்மா
.
இவங்ககிட்ட போயிட்டு பெண்ணியம் பேச தேவையே இல்ல
இந்தாடா தம்பி இந்த காசை அம்மாகிட்ட குடு
.
ஏம்மா நீ சாப்பிட்டியா
ஏண்டா சட்டைய நீ தொவச்சா என்ன அவ சீக்காளி பாவம்ல
இந்த கரிசனை அப்பா
.
எங்களுக்கு
இந்த பெண்ணியம்
அன்பு போதும்
.
பெண்ணியம் பேருல இங்கிலீஸ் பேசணும்
தொப்புள் தெரிய உடுப்பு போட்டு
அக்குள் தெரிய பிளவுஸ் போட்டு
மார்பை தூக்கி கட்டி
.
அடுத்த பெண்களும் இப்புடித்தான் இருக்கனும்னு
எவனோ ஒரு லூசு சொன்னா
அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை
.
பெண்மை ஓர் அற்புதமான விடயம்
.
அடுத்த பொம்பள உடம்பை ரசிக்கணும்னு இருக்குற
பரதேசிகள்தான்
பிரா தெரியிற மாதிரி போடு
பேன்ட்டி தெரியிற மாதிரி போடு
அதான் பெண்ணியம்னு உசுப்பேத்துவான்.....
.
தலைவர் பிரபாகரன் மிகச்சிறந்த ஆளுமை உள்ளவர்
.
அவர் பெண்களை மிக உயர்ந்த லட்சியத்தோட
உயர்த்தி போரில்
கடலில் ஆயுத பயன்பாடுகளில்
வங்கி பொருண்மியம் வேவு
பனைமரங்களை சுமக்கும் அளவு
உடல் தைரியம்
இன்னும் எவ்வளவோ கற்றுக்கொடுத்த
சிறந்த முன்னோடி அவரே
.
கர்ப்பப்பை எடுத்தா
நீ பெண்ணியவாதி
அப்புடின்னு சொல்லல
.
நம்ம வீட்டு பொண்ணுங்க மேல
எதுக்கு இவ்ளோ அக்கறை இவனுங்களுக்கு
வேற ஒன்னும் இல்ல
.
பெண்களை சீரழித்தால்
அந்த இனத்தை சீரழிக்கலாம்
.
ஆம்பள போல வேஷம் கட்டுனா
சமமாஆயிருவாங்கன்னு சொல்லுறது
எவ்ளோ பெரிய அபத்தம்
.
ரகுநந்தன் வேளமாலிகிதன்
11 அக்டோபர், 2017 · Sydney, நியூ சவுத் வேல்ஸ், அவுஸ்ரேலியா

Thursday, June 11, 2009

ஐ.டி. நிறுவனங்களுக்கு மேலும் 3 ஆண்டுக்கு வரி சலுகை: ராசா பரிந்துரை

டெல்லி: சாப்ட்வேர் தொழில்நுட்ப பூங்காங்களுக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு வரிச் சலுகை அளிக்கட வேண்டும் என்று தொலைத் தொடர்பு மற்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாகமன்மோகன் சிங்கை சந்தித்து அவர் வேண்டுகோள் விடுத்தார்.

சாஃப்ட்வேர் தொழில்நுட்ப பூங்கா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த வரிச் சலுகை காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்துவிட்டது. இதையடுத்து வரிச் சலுகை ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.

ஆனால், அதற்குப் பிறகு வரிச் சலுகை ரத்தாகலாம் என்று கருதப்பட்டது. சர்வதேச பொருளாதார மந்த நிலையால் சாப்ட்வேர் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வரிச் சலுகை ரத்தானால் அந்தத் துறை மேலும் சிக்கல்களை சந்திக்கும் என்று கருதப்படுகிறது.

இந் நிலையில் பிரதமரை சந்தித்த ராஜா மேலும் 3 ஆண்டுகளுக்கு வரிச் சலுகையை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஐ.டி. நிறுவனங்களுக்கு வரிச் சலுகையை நீட்டிப்பதால் ஏற்படும் பலன்களை அவர் பிரதமரிடம் விளக்கினார்.

மேலும் மத்திய பட்ஜெட் தயாரிக்கப்படும் முன் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்து வரிச் சலுகை குறித்துப் பேசவுள்ளதாகவும் ராசா கூறினார்.
THANKS :WWW.THATSTAMIL.ONEINDIA.COM